பலத்த சத்தத்துடன் விடிய விடிய பூஜை: குவைத்தில் 11 இந்தியர்கள் அதிரடி கைது…!!
குவைத்தில் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்த 11 இந்தியர்களை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
குவைத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம், கடற்கரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சத்யநாராயணா பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் படி, ஒரு கட்டிடத்தில் பூஜை நடத்தப்பட்டது.
அப்போது பக்தி பரவசத்தில் பக்தர்கள் பலத்த சத்தத்துடன் பஜனை பாடல்களை பாடி பூஜை செய்தனர். நள்ளிரவை தாண்டியும் பூஜை களை கட்டியது.
இதனால் அண்டை பகுதியில் வசிப்பவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிசார் 11 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து உடுப்பி– சிக்மகளூரு தொகுதி எம்.பி. ஷோபா சரன் தலாஜி குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஜெயினுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும், அவர்களை விடுதலை செய்யும்படி மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating