பாகிஸ்தானில் பெண்ணுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியை சேர்ந்தவர், முகமது இக்பால். இவர் அங்குள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் சைபர் குற்றப்பிரிவில் ஒரு புகார் செய்தார்.
அந்தப் புகாரில், யாரோ ஒருவர், ‘ஜூனைத் ஜூனைத்’ என்ற போலி பெயரில் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி, தனது மகள் படத்தை அதில் வெளியிட்டு, மோசமான கருத்துக்களை கூறி, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறி உள்ளார்.
உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் கராச்சியை சேர்ந்த வாலிபர் நவீத் அகமது என்று கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து படங்கள், இணையதள இணைப்பு கருவிகளை கைப்பற்றினர். சைபர் கிரைம் சட்டப்படியும், பாகிஸ்தான் தண்டனைச் சட்டப்படியும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கராச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating