பாகிஸ்தான் கட்டட விபத்து: மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு…!!

Read Time:1 Minute, 31 Second

76c9606e-cea9-4147-9684-8aac1546955f_S_secvpfபாகிஸ்தானின் லாகூர் நகரின் தொழிற்சாலை பகுதியில், கடந்த புதன்கிழமை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்தது.

முன்னதாக இதில் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் நான்கு உடல்களை மீட்புக் குழுவினர் நேற்று மீட்டனர். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் 167 பேர் புதையுண்டதாகவும், அவர்களில் 109 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தக் கோர விபத்துக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே, அந்தக் கட்டிடத்தில் உள்ள விரிசல்களைக் கண்ட கட்டுமானத் தொழிலாளர்கள், அங்கு வேலை செய்ய மறுத்து போராட்டம் நடத்தியதாகவும், கடந்த மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதே இந்தக் கட்டடம் சேதமடைந்ததாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் பெண்ணுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!
Next post பாட்டு பாடும் ரொனால்டோவைப் பார்த்திருக்கிறீர்களா? வைரல் வீடியோ…!!