பாகிஸ்தான் கட்டட விபத்து: மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு…!!
பாகிஸ்தானின் லாகூர் நகரின் தொழிற்சாலை பகுதியில், கடந்த புதன்கிழமை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்தது.
முன்னதாக இதில் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் நான்கு உடல்களை மீட்புக் குழுவினர் நேற்று மீட்டனர். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் 167 பேர் புதையுண்டதாகவும், அவர்களில் 109 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்தக் கோர விபத்துக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே, அந்தக் கட்டிடத்தில் உள்ள விரிசல்களைக் கண்ட கட்டுமானத் தொழிலாளர்கள், அங்கு வேலை செய்ய மறுத்து போராட்டம் நடத்தியதாகவும், கடந்த மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதே இந்தக் கட்டடம் சேதமடைந்ததாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Average Rating