கடன் தகராறு: இரும்பு வியாபாரி நண்பருடன் கடத்தல்…!!
Read Time:1 Minute, 10 Second
சூளைமேடு பாரிதெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து (47). பழைய இரும்பு வியாபாரி. இவர் வடபழனி குமரன் காலனியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ.3½ லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
ஆத்தி முத்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆத்திமுத்துவையும், இவருக்கு கடனாக பணம் வாங்கி கொடுத்த அவரது நண்பர் ராஜகோபால் ஆகிய இருவரையும் ராஜேஷ் காரில் நடத்தி சென்றதாக தெரிகிறது.
இது குறித்து ஆத்திமுத்து மனைவி சூளைமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சூளைமேடு பள்ளிக்கூடம் அருகே ஆத்திமுத்துவையும், ராஜகோபாலையும் பத்திரமாக மீட்டனர்.
Average Rating