வாழப்பாடி அருகே மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கட்டிட தொழிலாளி…!!

Read Time:2 Minute, 57 Second

9da9e74e-d79e-46e6-bfb1-b4dbc96edc63_S_secvpfசேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பி. கண்ணுக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 41), கட்டிட தொலாளி. இவரது மனைவி சுமதி (37).

இவர்களுக்கு ஆனந்த் (14) என்ற மகனும், சந்தியா (12) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் புழுதிக்குட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் தனது மாமனாருடன் பெங்களூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு மகன், மகள் ஒரு அறையிலும் மற்றொரு அறையில் ஜெயராமனும் சுமதியும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஜெயராமன் திடீரென்று எழுந்தார். பின்னர் அவர் காய்கறிகள் வெட்டும் கத்தியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கோழி அறுப்பது போல் அறுத்தார். இதில் சுமதி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

இன்று அதிகாலை மகன், மகள் எழுந்து பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கொலையுண்ட சுமதியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக சேலம்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை ஜெயராமன் என்ன காரணத்திற்கான கொன்றார்? என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக அவர் மனநலம் பாதித்தவர் போல் காணப்பட்டார். இதனால் மனநலம் பாதிப்பால் அவர் மனைவியை கொன்றாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து ஜெயராமனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடன் தகராறு: இரும்பு வியாபாரி நண்பருடன் கடத்தல்…!!
Next post கூடுவாஞ்சேரி அருகே கழுத்தை இறுக்கி குழந்தை கொலை..!!