சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் ஊழியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை…!!

Read Time:2 Minute, 21 Second

f98ee544-ba62-49e2-9942-f50b6102b650_S_secvpfசிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், அரசு போக்குவரத்து கண்டக்டர் நமச்சிவாயம் உள்பட 10 பேர்களை சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக புதுக்கோட்டை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனோவோ நியமிக்கப்பட்டார்.

அத்துடன் சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை சிலர் சிவகங்கையில் உள்ள லாட்ஜ்களுக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனோவோ மற்றும் இன்ஸ்பெக்டர் ராதிகா ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை தொடங்கினர்.

சிவகங்கை பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜ்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த சிறுமி குறிப்பிட்டிருந்த நேரத்தில் லாட்ஜ் பதிவேடுகளில் உள்ள விவரங்களை சரி பார்த்த போலீஸ் அதிகாரிகள் அங்கு பணிபுரிந்த லாட்ஜ் ஊழியர்களிடம், அங்கு வந்து தங்கியவர்கள் யார்? உடன் வந்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை கேட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுமியின் அத்தை செல்வி தங்கியிருந்த வீடு மற்றும் அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்பியூரில் இளம்பெண் கொலையில் காதலன் கைது…!!
Next post ஜனாதிபதியை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்…!!