குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசம்! கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை…!!
நெடுங்கேணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் குடிபோதையில் அட்டகாசம் புரிந்த நிலையில், நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப் பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
இந் நிலையில், காலையில் பாடசாலைக்குச் சென்ற அதிபர், பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்டதுடன் காவலாளியிடம் நடந்த சம்பவங்களை கேட்டு
அறிந்து கொண்டார்.
இதனையடுத்து அதிபரினால் வலய கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவரால்உத்திரவிடப்பட்டதையடுத்து, அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் பொலிஸாரினால் விடுதியில் தங்கியிருந்த 6 ஆசிரியர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு 6 ஆசிரியர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுவதால் வட மாகாண கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஆவண செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating