கொழும்பு கோட்டையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்…!!
Read Time:1 Minute, 23 Second
இன்று தொடக்கம் 12ம் திகதி வரை கோட்டை நாக விகாரையுடன் தொடர்புடைய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக தேசிய ஒற்றுமைக்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இறுதிவரை அயராது உழைத்த வணக்கத்துக்குரிய சோபித தேரரின் மறைவின் நிமித்தம், இவ்விசேட போக்குவரத்து திட்டங்கள் தற்காலிகமாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் அஞ்சாது குரல் கொடுத்து வந்த சோபித தேரரின் இழப்பு இலங்கை வாழ் அனைவருக்கும் பாரிய சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவரது மரணத்தின் நிமித்தம், மேற்கொள்ளப்படவிருக்கின்ற சடங்குகளுக்காகவே, இவ்விசேட போக்குவரத்து விதிகள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Average Rating