தெற்கு தனியார் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது…!!
அழுத்கமையில் பஸ் சாரதி ஒருவரை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு தூர சேவை தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாத்தறை – கொழும்பு, கதிர்காமம் – கொழும்பு, தங்காலை – கொழும்பு, காலி – கொழும்பு, கொழும்பு – அம்பலாங்கொடை போன்ற தூர சேவை பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பஸ் சாரதி ஒருவரை இபோச பஸ் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தென்மாகாண தனியர் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன சொய்சா தெரிவித்தார்.
தென்மாகாண தனியர் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அத தெரண வினவியது.
இதற்கு விளக்கமளித்த ஆணைக்குழு,
இதுதொடர்பாக பஸ் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து.
Average Rating