புற்றுநோயால் அவதியுறும் வாலிபர்: பொம்மையை திருமணம் செய்து கொண்ட வினோதம்…!!
புற்றுநோயால் அவதியுறும் சீனத்து வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பொம்மையை மணம் முடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீனத்து வாலிபர், தமது திருமணத்தை நடத்திப் பார்க்க ஆசை பட்டுள்ளார்.
நிஜமான பெண்ணை திருமணம் செய்துகொண்டால், தமது இறப்பிற்கு பின்னால் அந்த பெண்ணிற்கு அது சோகத்தை தரலாம் என அந்த வாலிபர் கருதியுள்ளார்.
அதனால் சீனாவில் வாலிபர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் ஒருவகை பொம்மையை தெரிவு செய்து, அதனுடன் திருமணம் முடிக்க முடிவு செய்துள்ளார்.
நிஜத்தில் திருமணம் நடைபெறுவது போலவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்ட அந்த வாலிபர், சீனாவின் பாரம்பரிய முறைப்படியே திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இதுவரை குறிப்பிட்ட அந்த வாலிபர் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களுக்கு பலர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இது திருமண அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் விளம்பர யுத்தி எனவும், மக்களை கவர நடத்தப்படும் புதுமையான விளம்பரம் இது எனவும் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் உண்மையிலேயே அந்த வாலிபருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் தமது கடைசி ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளதாகவும் சீனா ஊடகம் தெரிவித்துள்ளது.
Average Rating