நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவர்…!!

Read Time:2 Minute, 24 Second

husband_murder_002நடத்தையில் ஏற்பட்ட சம்தேகம் காரணமாக மனைவியை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மகள் அருணாதேவி(27).

இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தார். இவருக்கும் நெல்லையை சேர்ந்த பரத்(35 என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2013ல் திருமணம் செய்த இவர்களுக்கு ஜெயப்பிரதாப் (2)என்ற மகன் உள்ளான்.

இவர்கள் விளாத்திகுளத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.எனினும் தனிக்குடித்தனம் செல்ல மனைவியை பரத் தொடர்ந்து வற்புறுத்தினார்.

இதன் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் அருணாதேவி, பரத் ஆகியோர் தனிக்குடித்தனம் சென்றனர்.

பின்னரும் கணவன், மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டது. மேலும் அருணாதேவி மீது பரத்துக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அருணாதேவியை தான் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் பரத் சரமாரியாக குத்திக்கொன்றார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் பொலிசார் சம்பவ இடம் சென்று அருணாதேவியின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் பரத்தை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயால் அவதியுறும் வாலிபர்: பொம்மையை திருமணம் செய்து கொண்ட வினோதம்…!!
Next post 20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழும் மருத்துவர்: இறந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் மகிழ்ச்சி…!!