20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழும் மருத்துவர்: இறந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் மகிழ்ச்சி…!!

Read Time:3 Minute, 0 Second

dead_found_living_002இறந்துவிட்டதாக கருதப்பட்டிருந்த, ஸ்பெயின் நாட்டின் உளவியல் மருத்துவர் ஒருவர் 20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழ்ந்துவரும் செய்தி அவரது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் Seville பகுதியில் உளவியல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் Carlos Sanchez என்பவர்.

அதிகபடியான மன அழுத்தம் காரணமாக இவர் கடந்த 1995-ம் ஆண்டு தமது 26-வது வயதில் குடும்பத்தினரிடம் இருந்து அகன்று செல்லும் நோக்கில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மருத்துவர் Sanchez குறித்த தேடுதலில் போதிய பலன் இல்லை என தெரிந்ததும், மருத்துவர் இறந்துவிட்ட்தாக குடும்ப உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் Maremma பகுதியில் காளான் பறிக்கும் இருவர் மருத்துவர் Sanchez தங்கியிருக்கும் கூடாரத்தை கடந்து சென்றுள்ளனர்.

அவர்களை சந்தித்து பேசிய மருத்துவர், தாம் ஸ்பெயின் நாட்டுக்காரர் எனவும் உளவியல் மருத்துவர் எனவும், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் தனியாக வாழ்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது கடவுச்சீட்டை அவர்களிடம் காண்பித்த அந்த மருத்துவர், தமது மறைவிடத்தை வெளியாட்கள் கண்டுகொண்டுள்ளதால் அப்பகுதியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே இச்செய்தி குறித்து அறிந்துகொண்ட அவரது பெற்றோர்கள் உடனடியாக இத்தாலி புறப்பட்டு சென்று குறிப்பிட்ட பகுதியில் தேடியுள்ளனர்.

ஆனால் அப்பகுதியில் இருந்து மீண்டும் மருத்துவர் Sanchez தலைமறைவாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறந்துள்ளதாக கருதியிருந்த தங்களது மகன் உயிருடனே இருப்பது தெரிய வந்தது சோர்ந்துபோன குடும்பத்தினருக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுபோல் உள்ளதாக மருத்துவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவர்…!!
Next post 9 வயது சிறுமியை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்: துப்பாக்கியால் சுட்டு கொன்ற பொலிசார்…!!