9 வயது சிறுமியை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்: துப்பாக்கியால் சுட்டு கொன்ற பொலிசார்…!!
அமெரிக்க நாட்டில் ’பிட் புல்’ எனப்படும் வளர்ப்பு நாய் ஒன்று 9 வயது சிறுமியை கடித்து குதறி கொன்றதை தொடர்ந்து, காப்பாற்ற வந்த பொலிசார் துப்பாக்கியால் நாயை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ள எல்மோண்ட் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு 9 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை 10 மணியளவில் வந்துள்ளார்.
ஹோலண்ட் அவெனியூவில் அமைந்துள்ள அந்த வீட்டின் பின்புறத்திற்கு சென்ற அந்த சிறுமி, அங்குள்ள மற்ற 2 சிறுமிகளுடன் விளையாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்கு பின்புறம் வந்த 80 பவுண்ட் எடையுள்ள பிட் புல் என்கிற வளர்ப்பு நாய் 9 வயது சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளது.
இந்த தகவலை பெற்று அங்கு வந்த பெண் பொலிசார் இருவர், வீட்டிற்கு பின்புறம் உள்ள வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, அங்கே கொடூரமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிறுமி துடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
பொலிசாரை கண்ட நாய் அவர்கள் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இருவரில் ஒரு பொலிசார் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக நாயை நோக்கி சரமாரியாக சுட்டதில் நாய் அதே இடத்தில் இறந்துவிடுகிறது.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், காயங்கள் மிக மோசமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டில் வளர்க்கும் நாயை தகுந்த முறையில் பாதுகாக்க தவறியதாக கூறி, நாயின் உரிமையாளரான Carlyle Arnold(29) என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating