எவன்கார்ட் சர்ச்சையை கையிலெடுத்தார் ஜனாதிபதி…!!
Read Time:1 Minute, 18 Second
சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த சம்பவங்களுடன் தொடர்புபடக்கூடிய பாதுகாப்பு பிரிவு, நீதித்துறை உட்பட அனைத்து பிரிவுகள் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர்களுடனும் எதிர்வரும் தினங்களில் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி தீர்மானிப்பதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Average Rating