இந்தியாவின் உதவியை நிராகரித்த பாகிஸ்தான் சிறுவனின் தாய்…!!

Read Time:1 Minute, 49 Second

pak_boy_ramjan_002-615x822தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருக்கும் பாகிஸ்தான் சிறுவனை அடையாளம் காட்ட இந்திய வெளியுறவுத் துறை அளித்த உதவியை அவரது தாய் மறுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் ரம்ஜான் எனும் பாகிஸ்தானிய சிறுவன் இருந்து வருகிறார்.

இவரை அடையாளம் காட்ட பாகிஸ்தானில் உள்ள அவரது தாயாரக்கு இந்திய வெளியுறவுத் துறை உதவ முன்வந்துள்ளது.

ஆனால் இந்திய வெளியுறவுத் துறையின் அழைப்பை ரம்ஜானின் தாயார் ரஸியா பேகம் ஏற்க மறுத்துள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

ரம்ஜானின் தாயாருக்கு தமது மகனை காண வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையர் அன்சார் பர்னி, ஆனாலும் இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவி வருவதால் தற்போது இந்தியா வருவதற்கு இது உகந்த தருணமல்ல என அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இணக்கமான சூழல் உருவான பின்னர் தமது மகனை அடையாளம் காட்ட ரஸியா பேகம் வருவதாகவும் அன்சார் பர்னி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோசமாக நடந்துகொண்ட குடியேறிகள்: காயமடைந்த பொலிசார்…!!
Next post தேசிய அடையாள அட்டை மாற்றம்…!!