சேவல் சண்டையில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுவன் உட்பட 10 பேர் பலி…!!
Read Time:53 Second
மெக்சிகோவின் கரீரோ மாநிலத்தில் உள்ள குவாஜினிகியுலாபா நகரில் நேற்று முன்தினம் நடந்த சேவல் சண்டையின் போது அங்கிருந்த இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டனர்.
இந்த திடீர் தாக்குதலில் 12 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மெக்சிகோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating