குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன?
தமிழகத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனது இரண்டு வயது குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கடையம் அம்மன் கோயில் தெருவில் முருகன்- ஜோஸ்பினா தம்பதியினர் தங்களது இரண்டு வயது குழந்தை பிரியதர்ஷினியுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு பிரியதர்ஷினியுடன் வந்த ஜோஸ்பினா, தான் கொண்டுவந்த மண்ணென்ணையை எடுத்து தன் மீதும், குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதுடன், உடனடியாக தண்ணீர் ஊற்றினர்.
இதன்பின்னர் அவரிடம் விசாரித்ததில், எனது கணவர் மாட்டு வண்டியில் மணல் அள்ளினார். அவர் மீது கடையம் பொலிசார் பொய்யாக கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் தலைமறைவாகி விட்டார். எனவே நான் எனது குழந்தையுடன் கஷ்டப்படுகிறேன் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கஜோஸ்பினாவை லெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர், தொடர்ந்து பாளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating