குத்துச்சண்டையில் பங்குபற்றிய பாடசாலை மாணவி 11 நாட்களின் பின் மரணம்..!!
Read Time:57 Second
இரத்தினபுரி மத்திய கல்லுரியில் கல்வி பயிலும் 17 வயது பாடசாலை மாணவி கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அடி பலமாக பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி பல்லேகல தனியார் நிறுவனம் ஒன்றே இக் குத்துச் சண்டை போட்டியை நடத்தியுள்ளது.
இதன்போது மாணவியின் மீது அடி பலமாக பட்டு கீழே விழுந்தமையினால் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 11 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating