காதலியை கொடூரமாக குத்திக் கொலை செய்த காதலன்! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!!
சுவிஸில் பேருந்து நிலையம் ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக குத்தி கொலை செய்த காதலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 34 வயதுடைய தனது காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு காதலி அந்த நபரை விட்டு பிரிந்து விட்டார்.
இதனால் காதலியை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு கத்தியுடன் சென்ற காதலர், அவரது காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அவர் தனது காதலியை தாக்க தொடங்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி அங்கிருந்து கதவை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளார்.
அவர் பெர்ன் நகரின் பேருந்து நிலையத்தில் காயங்களுடன் காத்திருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த காதலர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2013ம் ஆண்டு யூலை 17ம் திகதி நடந்தது. காதலர் அடுத்த 3 வாரத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தான் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் தான் தனது காதலியை கொல்லவில்லை என்றும், அவரை சமாதானப்படுத்தவே சென்றதாகவும் அடித்து கூறியுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு சிகிச்சையளித்த மனநல மருத்துவர் அவர் ஆளுமை கோளாறு (personality disorder) நோயால் அவதிப்படுவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Average Rating