குர்திஷ் போராளிகளின் தாக்குதலில் 3 துருக்கி போலீசார் உட்பட 4 பேர் பலி..!!
துருக்கி, ஈராக் உள்ளிட்ட நான்கு தேசங்களின் சில பகுதிகளை இணைத்து குர்திஸ்தான் என்ற தன்னாட்சி பகுதியினை உருவாக்க குர்து மக்கள் முனைந்து வருகின்றனர். இதில் முக்கியமாக, துருக்கியின் தென்கிழக்கு பகுதியை சுயாட்சி பகுதியாக மாற்றுவதற்காக 1984ம் ஆண்டிலிருந்து பி.கே.கே. என்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளிக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
துருக்கி பாதுகாப்பு படைகளுக்கும், குர்திஷ் படைகளுக்குமிடையில் அடிக்கடி நிகழும் துப்பாக்கிச் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துருக்கி பாதுகாப்பு படைகள் மீது இரண்டு வெவ்வேறு இடங்களில் குர்திஷ் போராளி குழுக்கள் நடத்திய தாக்குதல் நடத்தினர். மர்தின் மாகாணத்தில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார், ஒரு போலீஸ் படுகாயமடைந்தார். இதேபோல், சிர்நாக் மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 3 போலீசார் கொல்லப்பட்டனர். பி.கே.கே. போராளிக் குழுவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
Average Rating