அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலியான பரிதாபம்..!!

Read Time:1 Minute, 24 Second

turky_boat_002துருக்கி கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இவர்கள் சட்டவிரோதமாக ஆபத்தான கடல் பயணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பல்வேறு விபத்துகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் துருக்கி ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கிரீஸ் நாட்டிற்கு செல்வதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து குறித்து அறிந்ததும் விரைந்து வந்த துருக்கி கடலோரக் காவற்படையினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

27 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பலியானவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உச்சகட்ட பிரசவ வலியில் மகள் பிறந்தபோது மனைவியின் முகபாவத்தை செல்பி எடுத்த வாலிபர்..!!
Next post இலங்கை கடற்பகுதியில் நாளை விழும் மர்ம பொருளை ஆராய்வதற்கான குழு சென்றது..!!