அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலியான பரிதாபம்..!!
துருக்கி கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இவர்கள் சட்டவிரோதமாக ஆபத்தான கடல் பயணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பல்வேறு விபத்துகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் துருக்கி ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கிரீஸ் நாட்டிற்கு செல்வதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து அறிந்ததும் விரைந்து வந்த துருக்கி கடலோரக் காவற்படையினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
27 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பலியானவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating