பாடசாலை செல்லும் போது பஸ் மோதியதில் 09 வயது மாணவி பரிதாபமாக பலி..!!
Read Time:1 Minute, 15 Second
ஹெட்டிபொல, கொட்டம்பபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஞ்சள் கடவையினால் பாதையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவிகள் இருவர் மீது பஸ் வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மாணவிகளும் ஹெட்டிபொல வைத்தயசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர், அதில் ஒரு மாணவி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
09 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 13 வயது மாணவி வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸர் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு மாணவிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் எனத் தெரியவந்துள்ளது.
பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating