அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது..!!

Read Time:1 Minute, 56 Second

pris-720x480தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 4 பேரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மருத்துவ குழுவொன்றும் கைதிகளின் நிலமைகளை பார்வையிட தற்போது அங்கு வந்துள்ளதாகவும் அநுராதபுர சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்டிகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் இந்த நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இவர்களது விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை இலவச சீருடைகளுக்கு பதிலாக புதிய திட்டம்..!!
Next post பாழடைந்த வீட்டில் 15 வருட சிறை! 80 வயது தாய்க்கு பிள்ளைகளால் நடந்த கொடூரம்..!!