மற்ற குரங்குகளை “போட்டு தாக்கியதால்’ சிறை தண்டனை அனுபவிக்கிறது “பின்டூ”
“பின்டூ” என்ற ஏழு வயது குரங்குக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அது தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளது. செய்த குற்றம், சக குரங்குகளை தாக்கியது தான்.மும்பை பைகுல்லா வனவிலங்கு பூங்காவில் வளர்ந்து வந்தது “பின்டூ!’ குரங்குகள் உள்ள பெரிய கூண்டில் தான் பின்டூவும் வளர்ந்தது. பின்டூவுக்கு, குரங்குகளிலேயே தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பு. மற்ற ஆண் குரங்குகளை விட, தான் தான் பலசாலி என்ற திமிர். எல்லா பெண் குரங்குகளும் தனக்குத் தான் சொந்தம் என்ற ஆணவம். இதனால், கூண்டில் உள்ள ஆண் குரங்குகளை அடிக்கடி தாக்கி வந்தது.பெண் குரங்குகளை வேறு ஏதாவது ஆண் குரங்கு நெருங்கினால், பின்டூவுக்கு கோபம் வந்துவிடும். அந்த குரங்கை பாய்ந்து சென்று கடுமையாக தாக்கிவிடும். இதனால், பல குரங்குகள் காயமடைய நேரிட்டது.தொடர்ந்து இதே பிரச்னை நீடித்து வந்ததால், பின்டூவை, வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் தனியாக பிரித்தனர். தனி சிறையில், பூங்காவின் கால்நடை மருத்துவமனையில் வைத்திருந்தனர். சும்மா இருப்பார் களா, வனவிலங்கு ஆர்வலர்கள்? இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது பெரிய கூண்டில் அடைக்கப் பட்டுள்ளது பின்டூ. ஆனால், தனியாகத்தான். தொடர்ந்து அட்டகாசம் செய்ததால், இப்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறது பின்டூ.