டுபாய் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இரு யாழ் இளைஞர்கள் கைது ..!!

Read Time:2 Minute, 1 Second

airportசட்டவிரோத வீசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த வடபகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபுதாபி விமானத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்த இளைஞர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்தனர்.

23 மற்றும் 27 வயதான இந்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்வதற்காக இவர்கள் கொழும்பில் இருக்கும் தரகர் ஒருவருக்கு 60 லட்சம் ரூபாவை வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக செல்லுப்படியான கடவுச்சீட்டுக்களுடன் கடந்த 9 ஆம் திகதி அபுதாபி சென்றுள்ளனர்.

பின்னர், இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி அவுஸ்திரேலியா செல்வதற்கான வீசாவை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் புதுடெல்லியில் இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கான வீசாவை பெவற்றுள்ளனர். இவர்கள் வீசா பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுக்கள் காணாமல் போய்விட்டதாக கூறி, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா அலுவலகம் முன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!
Next post ஜனாதிபதி , விக்னேஸ்வரன் சந்திப்பு: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வழங்கிய தகவல்..!!