யாசர் அரபாத்தின் இல்லம் நினைவு அருங்காட்சியகம் ஆகின்றது..!!
Read Time:1 Minute, 4 Second
பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யாசர் அரபாத் கடந்த 2004 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த முகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார்.
ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டுக் கிடக்கின்றது. அந்த இல்லத்தில் யாசர் அரபாத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக அந்த இல்லத்தை ஹமாஸ் ஆட்சியாளர்கள், யாசர் அரபாத் கட்சியினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனத்தின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
Average Rating