5 வயது வளர்ப்பு மகனை கொடுமைப் படுத்திய தந்தை: உளவியல் சிகிச்சை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!!

Read Time:2 Minute, 15 Second

4081சுவிஸ் நாட்டின் ஜெனீவா பகுதியில் 5 வயதேயான வளர்ப்பு மகனை தந்தை ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவா பகுதியில் குடியிருந்து வரும் 45 வயதான தந்தை ஒருவர் தமது 5 வயதேயான வளர்ப்பு மகனை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவனை கழிப்பிட அறையில் வைத்தே கொடுமைப்படுத்திய அந்த கொடூர தந்தை, அந்த காட்சிகளை கமெராவில் பதிவு செய்தும் வைத்துள்ளார்.

போதிய உணவு வழங்காமல் சித்திரவதை செய்யப்பட்ட அந்த சிறுவனுக்கு உதவ வளர்ப்பு தாயையும் அவர் அனுமதிக்கவில்லை என கூறப்படுக்கிறது.

சிறு தவறு செய்தாலும் கூட 5 வயது சிறுவன் எனவும் பாராமல் அந்த தந்தை முகத்திலேயே குத்து விடுவதாக சிறுவன் தமது வளர்ப்பு தாயிடம் புகார் தெரிவித்துள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தந்தை கழிவறை தொட்டியில் இருக்கும் தண்ணீரை குடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் உளவியல் ரீதியான சிகிச்சை வழங்க உத்தரவிட்டதுடன், அதில் முன்னேற்றம் இல்லை எனில் 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த தந்தை, பாதிப்புக்குள்ளான அந்த சிறுவனுடன் பாசத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பின மாணவர்களை அடித்து விரட்டிய அப்பிள் கடை நிறுவன ஊழியர்களால் பரபரப்பு..!!(வீடியோ இணைப்பு)
Next post புயலில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. தடைகளை தாண்டி காப்பாற்றிய நபர்: குவியும் பாராட்டு..!!!