நாய்கள் சாப்பிட்ட நிலையில் இறந்து கிடந்த முதியவர்..!!
பிரான்சில் 63 வயது முதியவர் இறந்து கிடந்j நிலையில் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சின் Montpellier நகரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் வசித்து வந்த முதியவர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் இறந்துள்ளார்.
ஆனால், இவர் இறந்தது குறித்து அக்குடியிருப்பில் வசித்து வந்த யாருக்கும் தெரியாத நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது,
இதுகுறித்து அருகாமையில் வசிப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார் அவரது உடலை பார்த்தபோது, அவரது உடலின் கால்பகுதின் பாதியினை நாய் சாப்பிட்டுள்ளது, மேலும் துர்நாற்றம் வீசிய நிலையில் உருக்குலைந்துபோன நிலையில் அவரது உடல் கிடந்துள்ளது,
இந்த சம்பவம் குறித்து குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவர் கூறியதாவது, இந்த பகுதி வாழ்வதற்கு ஏற்ற இடமாகும், அமைதியான இந்த இடத்தில் வசிக்கும் நாங்கள் அனைவரும் ஒருவரைப்பற்றியொருவர் தெரிந்துகொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு குடியிருப்புவாசி கூறியதாவது, இறந்துகிடந்து முதியவர் எப்போதும் அந்த நாயுடன் தான் இருப்பார் என்று கூறியுள்ளார்.
உடலை கைப்பற்றிய பொலிசார், இறப்பிற்கான காரணம் அறிவதற்காக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்,
Average Rating