அவனியாபுரம் அருகே காதலிக்க மறுத்த பெண் மீது மிளகாய்பொடி வீச்சு: 3 பேர் கைது…!!

Read Time:1 Minute, 30 Second

87f1ddaa-d59d-44b1-aea1-3324d0cd00ed_S_secvpfஅவனியாபுரம் அருகே உள்ள ராஜமாநகரை சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த தவம் (21) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலுக்கு ஜாஸ்மின் மறுத்து விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தவம், அவரது அக்காள் கணவர் மணி மற்றும் உறவினர் மூர்த்தி ஆகிய 3 பேரும் ஜாஸ்மின் வீட்டிற்கு சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தவம் உள்பட 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ஜாஸ்மின் மீது வீசினர். இதை தடுக்க வந்த ஜாஸ்மினின் பெரியம்மாளும் தாக்கப்பட்டார். மிளகாய்பொடி கண்ணில் விழுந்ததால் ஜாஸ்மின் அலறி துடித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகுமுத்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மீது மிளகாய்பொடி தூவிய தவம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூர் கப்பன் பூங்காவில் 30 வயது பெண் பாலியல் பலாத்காரம்: பாதுகாவலர்கள் வெறிச்செயல்..!!
Next post வியாபாரமாகும் வடிவேலு வசனம்: வருத்தத்தில் வைகைப்புயல்..!!