ஜேர்மனியில் 7 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு: மர்மமான முறையில் மரணம்…!!
Read Time:1 Minute, 12 Second
ஜேர்மனியில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள Wallenfels என்ற நகரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் பொலிசாரை தொடர்பு கொண்டு, குழந்தை ஒன்று இறந்துகிடப்பதாக தெரிவித்துள்ளார். குடியிருப்பிற்கு விரைந்து வந்த பொலிசார், அங்கு 7 குழந்தைகளின் சடலங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த மே மாதம் தனது இரு குழந்தைகளை கொன்று குளிர்சாதன பெட்டியில் ஒளித்து வைத்ததற்காக தாய் ஒருவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating