இரவு விடுதிக்கு சென்ற தாய்: குழந்தையை அடித்துக்கொலை செய்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)…!!
அமெரிக்காவில் ஒரு வயது குழந்தையை 8 வயது சிறுவன் அடித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பர்மிங்ஹாம் காவல் துறை செய்தி தொடர்பாளர் சீன் எட்வர்ட்ஸ் கூறியதாவது, அமெரிக்காவில் பர்மிங்ஹாம் நகரில் வசிப்பவர் கடேரா லிவிஸ்( 26).
இவர் அக்டோபர் 11 ஆம் திகதி, தன் ஒரு வயது பெண் குழந்தை கெல்சியை வீட்டில் விட்டு விட்டு ஆண் நண்பருடன் இரவு விடுதிக்கு சென்றுள்ளார்.
அந்த நண்பரின் எட்டு வயது மகனும் வீட்டில் இருந்துள்ளான். நள்ளிரவில் குழந்தை அழுதிருக்கிறது, அதை சமாதானப்படுத்த சிறுவன் முயன்றுள்ளான். ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.
ஆத்திரத்தில் அந்த சிறுவன் குழந்தையை கண்டபடி அடித்துள்ளான். அதில், குழந்தை இறந்து விட்டது. நள்ளிரவு, 3:00 மணியளவில் வீட்டிற்கு வந்த கடேரா, காலை, 11:00 மணிக்குத் தான் குழந்தையை பார்த்துள்ளார்.
அதிர்ச்சியடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது உடன் இருந்த, வேறு ஒரு சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் படி 8 வயது சிறுவன் மீது, கொலை வழக்கு போடப்பட்டுள்ளது.
அவன், சிறார் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். தாய் என்ற முறையில் குழந்தையை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளத் தவறிய, கடேரா மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
Average Rating