சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: 28 பேர் மாயம்..!!

Read Time:1 Minute, 16 Second

e3e3b856-6c29-4908-ac19-8351f5af587f_S_secvpfசீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீன அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெஜியாங் மாகாணத்தின் யாக்ஸி நகரத்தில் உள்ள லிடாங் கிராமத்தில் நேற்றிரவு இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததோடு, 28 பேர் மாயமாகி உள்ளனர். லிடாங் கிராமத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மண் மற்றும் பாறைகளில் சிக்கி சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டுள்ளன. அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்டுள்ள லிடாங் கிராமத்தில் தொடர் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 27 வருடங்களுக்கு பின் ‘சோட்டா’ ராஜனை சந்தித்த சகோதரிகள்..!!
Next post வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரிக்கும் முதியவர்..!! (வீடியோ இணைப்பு)