வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரிக்கும் முதியவர்..!! (வீடியோ இணைப்பு)
அலகாபாத்தில் சாலையோர கடை ஒன்றை நடத்தும் நபர் ஒருவர் வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரித்து விற்பனை செய்து வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் ராம் பாபு என்ற 60 வயது நபர் சாலையோரத்தில் கடை வைத்து பக்கோடா தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.
ராம் பாபு கடைக்கு கூட்டம் அலைமோதுவதற்கு காரணம் என்னவென்றால், அவர் பக்கோடாவை வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயிலிட்டு பொரித்து எடுத்து தருகிறார்.
ராம்பாபு இது பற்றி கூறுகையில், எனது 14 வயதில் இருந்து இந்த பக்கோடா தயாரிப்பு விற்பனை தொழில் செய்து வருகிறேன்.
கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் பக்கோடா பொரித்து எடுப்பதாலேயே வாடிக்கையாளர்கள் எனக்கு அதிகம்.
வெறும் கையால் பக்கோடா பொரிப்பதை அறிந்த சிலர் என்னை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று கையை பரிசோதித்தினர்.
ஆனால் அவர்களால் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை என்று கூறினர்.
மேலும், இது கடவுள் எனக்கு அளித்த பரிசாகவே கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Average Rating