விலங்குகள் மீது அதிகம் நாட்டம்கொண்ட இளைஞர்: பாம்பினை கடிக்கவிட்டு தற்கொலை..!!

Read Time:2 Minute, 21 Second

killed_by_snakebyte_002-615x917அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விலங்குகள் மீது அதிக நாட்டம் கொண்ட இளைஞர் ஒருவர் தமது வாகனத்தில் பாம்பு கடியேற்று நினைவிழந்து கிடந்தது தற்கொலை என தெரிய வந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 18 வயதான Grant Thompson என்பவர் விலங்குகள் மீது அதிக நாட்டமும் அக்கறையும் கொண்டவர் என கூறப்படுகிறது.

இவர் தமது தாயாருக்கு சொந்தமான வளர்ப்பு பிராணிகளுக்கான கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த கடை வேறொருவருக்கு சொந்தமாக இருந்தபோதே, தனது சிறு வயதில் இருந்தே அந்த கடையில் வேலை செய்யத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென, பிரபல வீட்டு உபயோக பொருட்களின் கடை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நினைவிழந்து காணப்பட்டதாக அவசர சிகிச்சைப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Grant சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று Grant சுய நினைவு இழந்து கிடந்திருந்த வாகனத்தில் இருந்து காலியான ஒரு பாம்பின் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதே பகுதியில் இருந்து இறந்த நிலையில் கொடிய விஷம் கொண்ட Monocled cobra ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

இந்த பாம்பினை கடிக்கவிட்டு Grant தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுததால் ஆத்திரம்: உலுக்கியே கொன்ற கொடூர தந்தை..!!
Next post ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 குழந்தைகள் பிணம்: கொலை செய்யப்பட்டார்களா.!!