ஜனாதிபதிக்கு சீ.வி. கடிதம்..!!
Read Time:1 Minute, 8 Second
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதனை யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் அறிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தாம் வலியுறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், தமிழ் மக்களால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் மீது இருக்கின்ற கொஞ்சநெஞ்ச நம்பிக்கையும் அற்றும் போகும் என்பதையும், சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating