வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்: பொது மக்கள் சாலை மறியல்…!!
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்ததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும், அவர்கள் மக்களிடம், வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.
Average Rating