40 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையான பெற்றோர்கள் கண்டுபிடிப்பு: நண்பர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..!!

Read Time:2 Minute, 4 Second

canda_friends_002கனடாவை சேர்ந்த நண்பர்கள் இருவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமது உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் மனிடோபா மாகணத்தை சேர்ந்த லூக் மோனைக்ஸ் மற்றும் நோர்மன் பார்க்மேன் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக பழகிவந்தனர்.

இருவருமே தங்களது சொந்த குடும்பத்துடன் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதற்கு சிரமப்பட்டனர். மேலும், லூக்குக்கு நோர்மன் குடும்பத்தின் மீதும், நோர்மனுக்கு லூக்கின் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பாசம் இருந்து வந்தது.

இதற்கான காரணம் புரியாமல் தவித்து வந்த நண்பர்கள் இருவரும் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

பரிசோதனையின் முடிவில் நோர்மனின் பெற்றோர் தான் லூக்கின் உண்மையான பெற்றோர் என்றும், லூக்கின் பெற்றோர் நோர்மனின் பெற்றோர் என்ற உண்மையும் தெரியவந்தது.

அதாவது இருவரும் ஒரு மருத்துவமனையில் பிறந்துள்ளனர். ஊழியர்களின் அலட்சியத்தால் வேறு பெற்றோர்களிடம் மாற்றி கொடுக்கப்பட்ட உண்மை தெரியவந்தது.

இதனால் நோர்மன் மற்றும் லூக் அதிர்ச்சியடைந்தனர். எனினும் உண்மையான பெற்றோரை கண்டுபிடித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக நோர்மன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கூட்டாட்சி விசாரணை நடத்தவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்: பொது மக்கள் சாலை மறியல்…!!
Next post ஜேர்மனியில் 8 பச்சிளம் குழந்தைகளை கொன்றது தாயாரா? பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!