பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுததால் ஆத்திரம்: உலுக்கியே கொன்ற கொடூர தந்தை..!!
பிரித்தானியாவின் கிழக்கு யார்க்ஷயர் பகுதியில் பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுது தொல்லை தருவதாக கூறி அந்த குழந்தையை உலுக்கியே கொலை செய்துள்ளார் அதன் தந்தை.
கிழக்கு யார்க்ஷயர் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் 27 வயதான Liam Laverick.
இவர் தமது தூக்கம் கெடுவதாக கூறி வீறிட்டு அழும் பிஞ்சு குழந்தையை உலுக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அந்த குழந்தை பலத்த காயமடைந்து சுய நினைவை இழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே குழந்தை செயலற்று கிடப்பதை கண்ட அதன் தாயார், உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
ஆனால் குழந்தை Tommy-Lee ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்த பொலிசார், முதற்கட்ட விசாரணையில் Laverick குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும், தீவிர விசாரணையின் பின்னரே ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிமன்ற விசாரனையின் முடிவில் பிஞ்சு குழந்தையின் உயிரை பறித்த அதன் தந்தைக்கு 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Average Rating