மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்…!!
நகர்கோவில் அருகே மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியரை பொலிசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் புவியூரைச் சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் எஸ்தர் சிலியா என்பவருக்கு, மணவாளக்குறிச்சி ஆண்டார் விளையைச் சேர்ந்த இன்ஜினியரான கல்யாணமூர்த்தி என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரே ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு எஸ்தர் சிலியாவுக்கு சொந்தமான வீடு மற்றும் சொத்துக்களை எழுதி கேட்டு கல்யாண மூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்தர் சிலியா கன்னியாகுமரி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கல்யாணமூர்த்தி, அவரது தந்தை கணேசன், தாயார் ரமணி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் எஸ்தர் சிலியா தனிமையில் இருக்கும்போது கல்யாண மூர்த்தி எடுத்த ஆபாச படங்களை அவர் பேஸ்புக்கில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த எஸ்தர் சிலியா அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.
உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.
இந்நிலையில் இது குறித்து எஸ்தர் சிலியா தென்தாமரைகுளம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர்.
Average Rating