தொடர்மழையால் பூமிக்குள் இறங்கிய 2 மாடி கட்டிடம்: பொதுமக்கள் அச்சம்…!!

Read Time:1 Minute, 28 Second

building_collapse_001தொடர்மழையால் சென்னையில் 2 மாடி வியாபார கட்டிடம் ஒன்று பூமிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் பாரிமுனை கொத்தவால் சாவடியில் மகேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது.

மிகவும் பழமையான அந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் அரிசி மற்றும் மிளகாய் மண்டி உள்பட சில கடைகளும், முதல்தளத்தில் குடோனும் செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென கட்டிடத்தின் வலதுபுறம் பூமிக்குள் இறங்கியுள்ளது. இதனால், கைப்பிடி சுவர்கள் நொறுங்கி விழுந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்…!!
Next post 4 வயது சிறுவனை ‘பீடி’ குடிக்க வைத்த கும்பல்: WhatsApp வீடியோவால் அதிர்ச்சி (வீடியோ இணைப்பு)…!!