4 வயது சிறுவனை ‘பீடி’ குடிக்க வைத்த கும்பல்: WhatsApp வீடியோவால் அதிர்ச்சி (வீடியோ இணைப்பு)…!!
தமிழகத்தில் 4 வயது சிறுவனை ‘பீடி’ குடிக்க வைத்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, அதில் உள்ளவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அந்த வீடியோவில், சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுக்கு பீடி கொடுத்து, அதை பற்ற வைக்கின்றனர்.
அந்த சிறுவன் மூன்று, நான்கு முறை பீடியை இழுத்து புகையை வெளியே விடுகிறான். இதனால், அந்த சிறுவனுக்கு இருமல் ஏற்படுகிறது.
அந்த வீடியோ காட்சியில் பேசும் ஒருவர், இந்த காட்சி வெளியானால் 6 ஆண்டு தண்டனை கிடைக்கும் என கூறுகிறார்.
கடந்த யூலை மாதம், ஒரு வீடியோவில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள மேல் சோழங்குப்பத்தில், 4 வயது சிறுவனை மது குடிக்க வைத்து ரசிக்கும் இளைஞர்கள் அடங்கிய வீடியோ வெளியானது.
இதையடுத்து அந்த கிராமத்திற்கு சென்று அந்த வீடியோவில் இருந்த சில இளைஞர்களை பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating