மாதுருஓயவில் அவதானிக்கப்பட்ட ஒளி எரிகல்லா..!!
மாதுருஓய குளத்துக்கு அருகில் கடந்த வாரம் அவதானிக்கப்பட்ட மர்மான ஒளி, எரிகல் ஒன்றின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வானியல் ஆய்வாளர் கீர்த்தி விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாதுருஓய மீன்பிடி கிராமவாசிகளால் இந்த பிரகாரசமான ஒளியுடன் கூடிய மர்ம பொருள் அவதானிக்கப்பட்டிருந்தது.
சுமார் 50 நிமிடங்கள் வரையில் வான்பரப்பில் மிதந்த இந்த ஒளி, பின்னர் மறைந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், உலக எரிகல் அiமைப்பினால் கடந்த தினம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் படி, தற்போது எரிகல் வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த எரிகல் வீழ்ச்சி அநேகமாக பூமியின் வட அரைகோளத்தில் உள்ள நாடுகளிலேயே அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மிகவும் அரிதாக இது இலங்கையிலும் வீழ்ந்திருக்கலாம் என்று, வானியல் ஆய்வாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
Average Rating