பெண் போலீசுடன் கள்ளத்தொடர்பு: கண்டித்த போலீஸ்காரர் மனைவியை கொல்ல முயன்ற கொடூரம்…!!

Read Time:5 Minute, 53 Second

ff6259ca-6bac-4975-a7da-37aa81cdc3f4_S_secvpfதிருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. போலீஸ் சப்–இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் திவ்யா (வயது 25). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவலராக கடந்த 2010–ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

அப்போது அங்கு காவலராக பணியில் இருந்த கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் பகுதியை சேர்ந்த பைரவன் (34) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனி மையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு திவ்யாவுக்கு தெரியாமல் பைரவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனாலும் திவ்யாவும்–பைரவனும் அடிக்கடி போனில் பேசி வந்தனர். இந்த விஷயம் பைரவன் மனைவிக்கு தெரிய வந்ததும் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2011–ம் ஆண்டு தமிழ்செல்வி (24) என்ற பெண்ணை பைரவன் 2–வதாக திருமணம் செய்தார். பின்னர் 2014–ம் ஆண்டு தஞ்சை மாநகர ஆயுதப்படைக்கு பைரவன் மாற்றப்பட்டதை தொடர்ந்து அவர் தஞ்சை மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தமிழ் செல்வியுடன் வசித்து வந்தார்.

ஆனாலும் காதலி திவ்யாவுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். மேலும் தமிழ்செல்வி வெளியில் செல்லும் நேரத்தில் திவ்யா அங்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

கணவர் யாருடனோ? அடிக்கடி பேசுவதை பார்த்து சந்தேகம் அடைந்த தமிழ்செல்வி ஒருநாள் கணவர் நீண்ட நேரமாக பேசுவதை பார்த்து ஆத்திரமடைந்து அந்த போனை பிடுங்கி பேசியுள்ளார். அப்போது ஒரு பெண்ணிடம் அவர் பேசியது தெரிய வந்ததால் மேலும் ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வி அந்த பெண்ணை கண்டித்ததுடன் மேலும் தனது கணவருடன் பேசக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இது திவ்யாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து எப்படியாவது தமிழ்செல்வியை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த திவ்யா, பைரவன் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு கடந்த 13–ந்தேதி பர்தா அணிந்து மாறு வேடத்தில் சென்றுள்ளார். அங்கிருந்த தமிழ்செல்வியிடம் நைசாக பேச்சு கொடுத்த அவர் தான் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும், பைரவனிடம் அது குறித்து பேச வேண்டும் என்றும் பேச்சை தொடங்கிய அவர் பைரவன் வெளியில் சென்றிருப்பதை உறுதி செய்தார்.

பின்னர் திடீரென தான் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி தமிழ் செல்வியின் கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்தபடி கதறிய தமிழ்செல்வியின் முகத்தில் ஆசிட்டையும் ஊற்றி கொல்ல முயன்றுள்ளார். வலியால் அலறி துடித்த தமிழ்செல்வியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். இதை பார்த்த திவ்யா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று ஆசிட் ஊற்றியதால் முகத்தில் காயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் தப்பியோடிய திவ்யாவை தஞ்சை தெற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திவ்யா திருச்சி ஆயுதப்படை முகாமில் தற்போது காவலராக பணி புரிந்து வந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

காதல் என்ற போர்வையில் போலீஸ்காரர் ஒருவரின் தவறான உறவால் முதல் மனைவி பிரிந்து சென்று, 2–வது மனைவி ஆசிட் வீச்சால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும், பெண் போலீஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும் போலீசார் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறான உறவால் போலீஸ்காரர் குடும்பமே சின்னாபின்னமாகி விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர் மழை: சுவர் இடிந்து பெண் சாவு…!!
Next post மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…!!