மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…!!
Read Time:1 Minute, 0 Second
மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துள்ளான படகில் பயணம் செய்த பலரை காணவில்லை. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating