பிரான்சில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு: ராக்கெட் லாஞ்சர் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல்..!!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த வெள்ளி அன்று நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் பலியாகினர். 350 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாரிஸ் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை பிடிப்பதற்காக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக பிரதமர் மனுவேல் வால்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லியான் நகரில் மட்டும் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் வேட்டையின் போது, 5 பேரைக் கைது செய்துள்ள போலீசார், ராக்கெட் லாஞ்சர், ஏ-கே ரக தாக்குதல் துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடைகள். கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆல்பைன் நகரில் மட்டும் சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Average Rating