மனநோய்த் தடுப்பு மாத்திரைகளுடன் நபர் கைது..!!
Read Time:1 Minute, 5 Second
அநுராதபுரம், குருந்தன்குளம் பகுதியில் மனநோய்த் தடுப்புக்காகப் பயன்படுத்தப்படும் 783 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடத்தப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்நபரிடமிருந்து 20 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாத்திரைகளை, இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காகவே இவர் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating