நல்லாட்சியை குழப்ப முயற்சி – சஜித்..!!
Read Time:59 Second
நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை முடக்குவதற்கு சில அமைச்சர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் பதுளையில் நடைபெற்றிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நல்லாட்சி என்பது ஏமாற்று வேலை என்று தெரிவித்திருந்தார். நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறி இருந்தார். எனினும் சில அமைச்சர்கள் அரசாங்கத்தின் எதிர்காலத்தை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
Average Rating