கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்..!!
Read Time:45 Second
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடம் மாற்றம் செய்ய வேண்டாமென வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபைக்கு முன்னால் நேற்று (16) முதல் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
கண்டாவளை பிரதேச செயலகத்தினை புதிதாக கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள இடத்தினால் தமது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Average Rating