சீரற்ற காலநிலை : யாழ். பல்கலை கலைப்பீட நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..!!
Read Time:1 Minute, 5 Second
யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் அனைத்து வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ஞானகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குடாநாட்டிலுள்ள பல பகுதிகளில் தாழ்நில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
Average Rating