சிறுமி துஷ்பிரயோகம்; வைத்தியருக்கு பிணை..!!
Read Time:1 Minute, 2 Second
ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கரவனெல்ல வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.டி.எல். ப்ரணாந்துக்கு பிணை வழங்கி, ருவான்வெல்ல நீதவான் நீதிமன்ன நீதிபதி கே.ஏ.எஸ். புஷ்பகுமார, இன்று செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த ஆறு வயது சிறுமியை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமியின் தாய் வழங்கிய முறைப்பாட்டையடுத்து இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
Average Rating